அமரர் இ.செபராசா அவர்களின் 35ம் வருட நினைவாக அவரது மகனான கனடாவில் வசிக்கும் வர்மன் அவர்களால் 02.12.2015 இன்று வவுனியா கோவில்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் செபராசாவின் மனைவியும், வர்மனின் அம்மாவுமான திருமதி ஜெ.மனோராணி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் இந்த மதிய உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு முதியவர்களுக்கு உணவும் பரிமாறி அவர்களுடன் உணவும் உட்கொண்டார்கள்.






