ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் 6000 பேர் புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி நிர்வாக சேவையில் 852 வெற்றிடங்கள் நிலவுகின்றன. எதிர்வரும் காலங்களில் அவற்றைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டிலிருந்து அதிபர் சேவைக் கான ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. அத்துடன், பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். 6000 ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும்.
மேலும், கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் 1190 பதவி வெற்றிடங்கள் அரச சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் பூரணப்படுத்தப்படும் என வும் தெரிவித்துள்ளார்.





