வவுனியா பாவற்குளம் படிவம் 01 இல் போக்குவரத்து பாதைகள் கூட இல்லாது பற்றை காட்டுக்குள் வீட்டுத்திட்டம் கிடைத்து அரைகுறையாக கட்டிய வீட்டிலும், கொட்டிலும் வசிக்கும் 4 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழ் விருட்சத்திடம் சமூக சேவகி கமலாதேவி மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கனடாவில் வசிக்கும் வர்மனின் நிதி உதவியுடன் ஒரு மாதத்திற்குத் தேவையான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.





