
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், அதன் நான்கு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் 4 வான்கதவுகளும் 9 இஞ்சி ஆழத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. எனினும் இதனால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், வவுனியா – செட்டிகுளம் நோக்கிய போக்குவரத்து பாதைகளில் வெள்ளநீர் பாய்ந்து ஓடக் கூடிய வாய்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





