வவுனியா கற்குழியில் திருட்டுச் சம்பவம்!!

541

Thiruttu

வவுனியா தோணிக்கல், கற்குழி பகுதியில் நேற்று திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியருவதாவது..

வவுனியா தோணிக்கல் கற்குழி பகுதியில் நேற்று இரவு வீட்டின் மதிலினூடாக சென்ற திருடர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுளைந்து அங்கிருந்த நகைகள் மற்றும் பெருந்தொகையான பணம் என்பனவற்றை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.