கொள்ளுபிட்டி பகுதி நகையகம் ஒன்றில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர விஷேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நகையகத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள் அதன் உரிமையாளரின் முகத்தில் கைகுட்டை ஒன்றை அழுத்தி மயக்கமடைய செய்து பின்னர் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட 10 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆபரணங்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியொன்றின் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய இருவரும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.