நெடுங்கேணியில் ஐயப்பன் ஆலயம் அமைப்பதற்கான சுப வேளையில் அடிக்கல்லினை நான்கு மதங்களுக்குறிய மதகுருமார்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி ஓடவெளி கிராமத்தின் வவுனியா வடக்கில் ஐயப்பவிரதத்தை அனுஸ்ரிக்கும் அடியார்களின் ஏற்பாட்டில் ஐயப்பன் ஆலயம் அமைப்பதற்கு மங்களகரமான மன்மத வருடத்தின் சுபவேளையில் நான்கு மதங்களைச் சேர்ந்த வை.கு.ஜெயசுதக்குருக்கள் றணவனடாம்மிங்ங தேரர் அவர்களும் அருட்தந்தை ஞானமுத்து வெண்சல்லோஸ் மௌலவி ள.இம்ரான் ஆகியோரும் இணைந்து இவ்வாலயத்தை அமைப்பதற்கு மத வேறுபாடு இன்றி அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளனர்.
இதற்கு பிரதம அதிதியாக வவுனியா வடக்கு பிரதேச செயளாளர் க.பரந்தாமன் கலந்து ஆலயம் தொடர்பான நற்சிந்தனையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






