வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபம் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று காலை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.புஸ்பகுமார மண்டபத்தின் நுழைவாயிலை வைபவரீதியாக திறந்து வைத்தார்.
இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு. கா.உதயராஜா, மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






