கூமாங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கூமாங்குளம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கான உணவு, உடைப்பொதிகள் இன்று (24.12.2015) வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.செ.மயூரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான பாபு, குரூஸ், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற நிர்வாக இயக்குநர்கள், கூமாங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க நிர்வாகத்தினர், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாக சபையினர், பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.






