வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சாரதி மீது அரிப்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதி மீது இன்று காலை அரிப்பில் இருந்து மன்னார் வழியில் பயணித்த தனியார் பேருந்தின் நடத்துனர் முருங்கனில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை தொடர்ந்து வந்து நொச்சிக்குளம் பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.






