கடந்த 2015ல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இயந்திரவியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தை செல்வன் யோகேந்திரன் யனுசன், 4ம் இடத்தை சத்தியசீலன் கிசோக் , 11ம் இடத்தை யேசுதாசன் டயன்சன் ,12ம் இடத்தை சிவராஜா சரன்ராஜ், 16ம் இடத்தை பரமானந்தன் பிரதீப் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
உயிர்முறைமை தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தை சந்திரபோஸ் கவில் , 5ம் இடத்தை ஜெயக்குமார் முரளிதரன் , 6ம் இடத்தை சோதிராசா விசித்தகுமாரி, 7ம் இடத்தை சுந்தரலிங்கம் சஞ்ஜீத், 10ம் இடத்தை ஜெயராம் கிசோஜினி, 11ம் இடத்தை மனோகரன் விமலேஸ்வரனும், 14ம் இடத்தை கந்தகுமார் நர்மதா, 16ம் இடத்தை தாவீது முறால் மேரிமெற்றலின் , 17ம் இடத்தை அருந்தவராசா பிரியங்கா, 18ம் இடத்தை கனககேஸ்வரன் உதயகுமார் , 19ம் இடத்தை லங்கேஸ்வரன் தட்சாயினி, 20ம் இடத்தை இராஜகுமாரன் கட்சாயினி ஆகியோர் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தொழினுட்ப பிரிவில் நகர்புற மாணவர்களுடன் போட்டியிட்டு ஒரு கிராமப்புற மாணவரால் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904