
கணவர் இறந்துவிட்டதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவருக்கு இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்துவருவதாக கூறப்படுகிறது.இதனால் கிறிஸ்துதாஸ் தனியாக வசித்துவருகிறார். டயானா தனது மகன் சாம்சன் நிர்மல் குமாருடன் வசித்துவருகிறார்.
கிறிஸ்துதாசுக்கு சொந்தமாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனை நிலம் உள்ளது.அதை விற்க டயானா முடிவுசெய்துள்ளார். இதையடுத்து தனது கணவர் இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழை டயானா பாபு தயார் செய்தார்.இதன் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை வேறு ஒருவருக்கு டயானா பாபுவும், அவரது மகனும் விற்பனை செய்து விட்டனர்.
இந்நிலையில் இந்த தகவல்களை அறிந்து அதிர்ச்சியடைந்த கிறிஸ்துதாஸ் இது குறித்து பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் லலிதா லட்சுமி தலைமையில் பொலிசார் இது தொடர்காக வழக்கு பதிந்து விசாரணையில் இறங்கினர்.அதில், போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்தது உண்மைதான் என்பது தெரியவந்தது.இதையடுத்து டயானா பாபு மற்றும் அவரது மகன் சாம்சன் நிர்மல் குமார் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





