வடக்கு ஊடக கல்லூரியின் (தனியார் ), ஊடக கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (10.01.2015) காலை 09.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஊடக கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ரிஸ்கான் பதியுதீன், தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் அன்ரன் சோமராஜா, வணிக மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் முத்து முகமது, நகரசபை செயலாளர் தர்மேந்திரா மற்றும் கற்கை நெறி மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






