வவுனியாவில் இன்று காலை (11.01.2016) தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள் வவுனியா பிரதான நகரங்களில், வவுனியா பொது மேற்பார்வை பரிசோதகர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இராணுவத்தினர், பொலிசார் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள், நகரசபை சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட டெங்கு நுளம்புகள் பெருகும் பொதிமண்டப வீதி, கற்குழி, சுற்றுவட்ட வீதி, புகையிரத நிலைய வீதி, குடியிருப்பு, வைரவப்புளியங்குளம், இறம்பைக்குளம் ஆகிய இடங்களை இனங்கண்டு அவற்றை அழித்ததுடன் பொது மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.






