வவுனியா பண்டாரிகுளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் எற்படுசெய்யப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வானது இன்று (16.01.2016) கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தியாகராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா, வவுனியா நகரசபை செயலாளர் திரு.தர்மேந்திரா, பண்டாரிகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பகுதி கிராம சேவையாளர், எனைய பொதுஅமைப்புக்களின் தலைவர், செயலாளர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.






