வவுனியாவில் மூங்கில் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிறுவ தலைவர் இராம சுப்பிரமணியன் தலைமையில் இன்று(24.01.2016) காலை காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, இராஜங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா, அடையாள அட்டை தினைக்களத்தின் பணிப்பாளர் சரத்குமார, ஐக்கிய தேசிய கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளர் கர்னதாஸா, செயலாளர் சிவலிங்கம், வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் செயலாளர் மயூரன், இணைப்பாளர் புலேந்திரன் ஆனந்தன், தம்பா ஹேட்டல் உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






