தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் மேற்படி நிகழ்வு, கழகத்தின் அறிவொளி இல்லத்தில் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா சிதம்பரபுரம் அகதி முகாம் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இவ் செயற்றிட்டத்தில் கழகத்தின் அமெரிக்க கிளை இணைப்பாளர் திரு கோபி மோகன், கழகத்தின் உறுப்பினர் திரு எஸ்.சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






