புதிய இராணுவ தளபதி இன்று பதவியேற்பு..!

625
thayaஇலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) பதவியேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டது.

புதிய இராணுவத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தயா ரத்னாயக்க இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றியிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் பழைய மாணவரான தயா ரத்னாயக்க, ரக்பி மற்றும் தடகள விளையாட்டுகளில் திறமை காட்டியவராவார்.

இதேவேளை, நேற்றையதினம் பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பாதுகாப்புப் படைகளின் தளபதியாகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.