வவுனியா வேலங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 8 மீள்குடியேற்ற கிராமங்களின் நிரந்தர வீட்டுத்திட்டம், வீதிப் புனரமைப்பு, உட்கட்டமைப்பு தேவைகளை வலியிறுத்தி இன்று (04.02.2016) காலை 9 மணிமுதல் இரணை இலுப்பைக்குளம் சந்திப் பகுதியில் மன்னார் வீதியை மறித்து நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மன்னார் வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்களுடன் சமரசத்தில் ஈடுபட்டார்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.






