வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 2016 ஆண்டிற்கான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று (03.02.2016) பாடசாலை அதிபர் க.யோகராசா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, செட்டிகுளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன், உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரி திரு.சிறீதரன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.மோகனராசா, பழைய மாணவர் மன்ற செயலாளர் திரு.தயாபரன், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பாடசாலை சமுகத்தினர் கலந்துகொண்டனர்.
-சங்கீதன்-