இலங்கை அகதிக்கு தமிழ்நாட்டில் 11 வருட கடூழிய சிறைத்தண்டனை!

546

judge

இலங்கையின் அகதி ஒருவருக்கு தமிழகம் நாகப்பட்டினம் நீதிமன்றம் 11 வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
வெடிப்பொருட்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.

கே.கே நகர் திருச்சிராப்பள்ளி என்ற இடத்தில் உள்ள அகதி முகாமில் வசித்து வந்த இவர் சௌந்தரராஜன் என்ற பெயரைக்கொண்டவராவார்.

2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதியன்று இவர் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.

இதன்போது இவர் வைத்திருந்த செய்மதி தொலைபேசி, டெட்டினேட்டர் குச்சிகள், ஜெலிக்னைட் குச்சிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றை இவர் இலங்கைக்கு கடத்தவிருந்தார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.