வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று (08.02.2016) வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக அதிபர் திருமதி எம்.எ.மோகன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் திரு க.சிவநேசன் (பவன்) கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.என்.யு.என்.சுபசிங்க, மேக்சன் வங்கி முகாமையாளர் திரு ஆர்.சரவணன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் யூட் பரதமாறன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான அனுசரணையினை லண்டனைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.