வவுனியா மகாறம்பக்குளம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் க.வைதீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் (15.02.2016) அன்று நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, M.P.நடராஜ், கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.






