நெடுங்கேணி பகுதியில் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் நேற்று (16.02.2016) காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அங்கிருந்த உண்ணாவிரதப் பணியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பொது முகாமையாளர் மற்றும் ஓரு சில இயக்குனர் சபை உறுப்பினர்கள் தமது பதவிகளை துஸ்பிரயோகப்படுத்தி தங்களுக்கு கீழ் தொழில்புரியும் பணியாளர்களை முறையாக நடத்தாமல், தமது சுயலாபங்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கூட்டுறவுச் சங்கத்தை அழிவுப்பாதையை நோக்கி இவர்கள் நடத்திச்செல்வதால் 09 அம்சக் கோரிக்கைகளுடன் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் உண்ணாவிரத பணியாளர்களை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சபைக்கும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துவதாகவும், பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகமான தீர்வை பெற்றக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.