வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 128வது ஆண்டு விழா பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் கடந்த 15.02.2016 திங்கட்கிழமை பாடசாலையின் பழைய மாணவரும் முன்னாள் சிரேஸ்ட மாணவத் தலைவரும் மாணவத்தலைவர்கள் ஒன்றியத்தின் தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜனின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பாடசாலையின் 128வது ஆண்டுக்கான கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் அதிபரின் சேவைக்கான நினைவுப்பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம், பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கச் செயலாளர், பாடசாலையின் ஆசிரியரும் பழைய மாணவனுமாகிய சுதார்த்தனன், பாடசாலை மாணவர்கள், முன்னாள் சிரேஸ்ட மாணவத்தலைவர்கள் திரு.கோகுலகிருஸ்ணா, திரு.போசிகன் , செல்வி.சங்கீதா மற்றும் பழைய மாணவர்கள் திரு.லக்சன், செல்வி.கிருசாந்தினி, செல்வி.கீதாஞ்சலி, திரு.துலக்சன், ஜெஸ்டின், ஜெரோன், நிரோசா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












