ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண செலவில் குளறுபடி: விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

444

19191373 (1)

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதகாரனின் திருமண செலவில் குளறுபடி இருப்பதால் அது குறித்து கர்நாடகா அரசு விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தற்போது நடந்துவரும் நிலையில், கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், இன்றைய விசாரணையின் முடிவில் நீதிபதிகள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்காக ரூ6.45 கோடி செலவு செய்ததாக விசாரணை அமைப்பு தெரிவித்திருக்கிறது.இதனை ஆராய்ந்த விசாரணை நீதிமன்றமோ, ஆதாரங்கள் அடிப்படையில் ரூ3 கோடியைக் குறைத்தது.

அதனால் திருமண செலவு வெறும் ரூ3 கோடி என்றுதான் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படியானால் எஞ்சிய ரூ45 லட்சம் எங்கே போனது?

விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் கணக்கீடுகளில் 90% வித்தியாசம் இருக்கிறது.ஆகையால் சுதாகரன் திருமண செலவு குறித்து கர்நாடகா அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இந்த வழக்கை அதிகபட்சம் 4 வாரங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய முடிவின்படி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக ஜெயலலிதாவின் விடுதலை செல்லுமா? செல்லாதா? என்ற இறுதித் தீர்ப்பு வந்துவிடும் என தெரிகிறது.மேலும், சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இது தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.