வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (01.03.2016) காலை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்து.
வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களின் வழிகாட்லின் கீழ் வடமாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 180 மல்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்கான எம்.பி.நட்ராஜ்; ம.தியாகராசா, ஜெயதிலக, மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. பவானி பசுபதிராஜா, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்,
32லட்சம் ரூபா செலவில் அவுஸ்திரேலியா வைத்தியர்களின் அமைப்பினரால் வடமாகாண சகாதார அமைச்சரின் வேண்டுகோளிற்கு அமைய வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து வைத்திய நிபுணர்களின் பாவனைக்கான இயந்திரத்தினையும் கையளிப்பு செய்து வைக்கப்பட்டது.






