
வவுனியா புதுக்குளம் பகுதியில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த பாடசாலை மாணவி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
குறித்த பாடசாலை மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் காதலிப்பதாக கூறி கடந்த ஆண்டிலிருந்து மாணவியை பின்தொடர்ந்து வந்துள்ளார். மாணவியும் இளைஞனின் வார்த்தைக்கு இடம் கொடுத்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு குறித்த இளைஞனை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.





