
இன்று(06.03.2016) காலை வவனியா செட்டிகுளம் பகுதியில் டிப்பருடன் மோதுண்டதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் நேரியகுளம் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த டிப்பர் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியதில் சம்பவ இடத்திலே சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.






