வவுனியா பொது வைத்தியசாலையில் குளுக்கோமா பரிசோதனை!!

495

iStock_000023383541Medium

குளுக்கோமா தினத்தை முன்னிட்டு வவனியா பொது வைத்தியசாலையில் குளுக்கோமா பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா வைத்திசாலையில் மருத்துவத்துடன் தொடர்புடைய சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் குளுக்கோமா தினமும் எதிர்வரும் புதன் கிழமை (09.03.2016) அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் குளுக்கோமா பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு, உயர்குருதி அழுத்தம்உள்ளவர்களும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்த்தாக்கம் இலகுவில் தாக்க கூடிவர்கள் இப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்பதுடன் பரம்பரைகளாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் என்பன உள்ளவர்களும் சிரமம் பாராது பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய கலாநிதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை குளுக்கோமா தாக்கத்தை தடுத்து கண் பார்வை இழப்பை தடுக்க 40 வயதை கடந்த அனைவரும் பரிசோதனைகைள மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.