வவுனியா பாவற்குளத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய வன்னிப் பட்டறை!!

936

 
பாவற்குளம் படிவம் 1இல் வசிக்கும் 46 வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி சமூக சேவகி கமலாதேவி தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வன்னி பட்டறை அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் நேற்று (06.03.2016) அன்று பாவற்குளம் படிவம் 1 ஆதி நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது.
இந்த நிகழ்வில் கிராமசேவையாளர் பரராஜசிங்கம் ,பொலிஸ் பொறுப்பதிகாரி தென்னகோன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், பொருளாளரும் சமூக சேவகியுமான கமலாதேவி, ஆலய பூசாரியும் கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான பிரபாகரன், வன்னிப் பட்டறை அமைப்பின் உபதலைவர் டிலோஜன், உறுப்பினர்கள் யதுகுலன், லதுஜன், பிரதாபன், கஜீபன், விதுஜன், ரிசிகுலன், பிரகாசன் ஆகியோருடன் மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

DSCN1278 DSCN1284 DSCN1286 DSCN1288 DSCN1291 DSCN1295 DSCN1300 DSCN1301 DSCN1304 DSCN1309 DSCN1310 DSCN1314 DSCN1315 DSCN1317 DSCN1320 DSCN1323 DSCN1325 DSCN1328 DSCN1333 DSCN1335 DSCN1335_1 DSCN1340 DSCN1341