
வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
தேவராஜா சின்ன கனோஜி என்ற 27 வயதான இளைஞரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
குவைத்தில் இருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பட்ட நிலையில் தாம் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிலேயே தாம் நாட்டிற்கு திரும்பி அனுப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-ஐ.பி.சி தமிழ்-





