உலகின் மிகப்பெரிய விலங்கினம் இலங்கையருகில்! உல்லாசப் பயணிகள் படையெடுப்பு!!

494

f0k5103-2

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உலகின் அரியவகை நீல நிற திமிங்கலங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதன்மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை நோக்கி படையெடுப்பதாக லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுதர்மா பகிர்ந்து கொண்டார்.

நீலத் திமிங்கலம் என்பது உலகத்திலேயே மிகப்பெரிய பாலூட்டி விலங்காகும். இவை மிகவும் அரிதான உயிரினமாகும். இதன் நிறை சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கிலோகிராமாகவும் இதன் நீளம் 30 மீற்றர்களாகும்.இந்த விலக்கினம் தற்போது இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு விடயங்களை இதன்போது பகிர்ந்து கொண்டார்.