வவுனியாவில் பதினைந்திற்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் : சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!!

559

 
வவுனியாவில் பதினைந்துக்கு மேற்பட்ட மதுபான சாலைகள் இருப்பதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று நடாத்திய (11.03.2016) ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.

வவுனியா கமநலசேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட கற்குளம் கிராமத்திற்கான வீதித் திருத்தம் செய்யப்படாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டபோதிலும் எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மசாஜ் நிலையங்கள் உட்பட மதுபானசாலைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது எடுத்துக்கூறப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் பொதுவாக உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் இன்றைய ஊடக சந்திப்பின் பொது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகளால் ஊடகவியலாளர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இச்சந்திப்பில், அமைப்பின் இணைத்தலைவர்களான பூ.சந்திரபத்மன், சு.ஜெகதீஸ்வரன் (சிவம்), செயலாளர் டொன் பொஸ்கோ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

DSC_0001 DSC_0004 DSC_0005 DSC_0007 DSC_0008 DSC_0009