வவுனியா ஹரிஸ்ணவி வன்புணர்வுக் கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

953

vavuniya_court

வவுனியாவில் 14 வயது மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேக நபர் முற்படுத்தப்பட்ட போது சந்தேக நபரின் விளக்கமறியலை மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.