வவுனியா நெளுக்குளம் பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் செல்வி T.தர்சிகா தலைமையில் நேற்று (12.03.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக நெளுக்குளம் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பகுதிக் கிராம சேவையாளர் திரு.கணேசலிங்கம், வவுனியா தெற்கு பிரதேசசபை செயலாளர் திருமதி.கிசோர் சுகந்தி, சனசமூக நிலையத் தலைவர் திரு.அற்புதராசா மற்றும் ஒய்வுபெற்ற தபால் அதிபர், அயல், முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.






