வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் படுகாயம்!!

537

Thuvakku

வவுனியா பாவற்குளம் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் கட்டுத்துவக்கில் அகப்பட்டு படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த சிவபாதம் யோகேந்திரம் வயது 40 வயல் வேலை செய்வதற்கு பாவற்குளம் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் (14.03.2016) பிற்பகல் வேலை முடிந்து வீடு திரும்பும்போது வயலில் இருந்த கட்டுத்தவக்கில் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.