
திருகோணமலை பிரதேசத்தில் மருமகளைத் தாக்கிய மாமாவை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஆனந்தபுரி, பகுதியைச் சேர்ந்த 44வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது அக்காவின் மகளுக்கு சாராயம் குடித்து விட்டு பணம் கேட்டு தாக்கியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.





