பல்கலைக்கழகத்திற்கு அதிக மாணவர்களை இணைக்க நடவடிக்கை!!

548

87539293

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 27,600 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்களுக்கும் 18 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 25,200 மாணவர்களையே பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்கப்பட்டனர்.இம்முறை பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.