ஆற்றில் சடலமாக மிதந்த இளைஞர்!!

464

1 (44)

வாகரை – புதூர் பிரதேசத்திலுள்ள ஆற்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர் கதிரவௌி பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.