இலங்கையில் ஆறு மாத காலத்தில் 75 பேருக்கு மரண தண்டனை!!

610

court

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 75 பேருக்கு பல்வேறு நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1080 பேர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திருமணமான பெண்ணுடன் கள்ளத் தொடர்பு பேணியமை, காணிப் பிரச்சினை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை, போதைப் பொருள் பயன்பாடு போன்ற காரணிகளினால் ஏற்பட்ட முரண்பாடுகளில் கொலைகளை மேற்கொண்டவர்களும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய காரணிகளுக்காகவும் அதிகளவானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான மரண தண்டனைக் கைதிகள் வெலிக்கடை மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.