காற்பந்து உலக கிண்ண போட்டிகளை கட்டாரில் நடத்துவதில் சிக்கல்!!

584

qatar-world-cup1

கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் இடம்பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் காலம் கோடைக் காலமென்பதால் குறித்த போட்டிகளை நடத்துவது சாத்தியமற்றது என கால்பந்து சங்கத் தலைவர் க்ரெக் டைக் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த காலப்பகுதிக்கு ஏற்றவாறு போட்டிகளை நடாத்த தயார் என கட்டார் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் அரங்குகள் முழுவதும் குளிரூட்டப்பட்டு காணப்பட்டாலும் , ரசிகர்களுக்கான வசதிகள் போதுமானதாக அமையாது என க்ரெக் டைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து போட்டிகள் இடபெறுவதற்கான திகதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.