
ஜேர்மன் விமான நிலையத்தில் ஒரு சரக்கு விமானமானது தீப்பிடித்து எரிந்ததில் 1000 கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளன.
ஜேர்மன் நாட்டில் உள்ள லேய்ப்ஜிக் என்ற விமான நிலையத்தில் கோழிக்குஞ்சுகளை எடுத்துச் சென்ற சரக்கு விமானம் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்து குறித்து செய்தி தொடர்பாளர் யுவ் ஸ்ச்கார்ட்(Uwe Schuhard) கூறுகையில், இந்த விபத்தில் அதிகமான தீப்பிழம்புகள் வெளியானதால் 1000 கோழிக்குஞ்சுகள் பலியாகின.
தீப்பிடித்து Antonov A12 விமானம் வெடித்ததையடுத்து 15 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 60 தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர் என்று கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்த விசாரணையானது நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





