வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016 நேற்று (12.05.2016) வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகளின் பின்னர் முருகப் பெருமான் வள்ளி சமேதராக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.
10 நாள் திருவிழாவில் முதலாம் நாளான நேற்று முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலா வந்து பதர்களுக்கு அருள்புரிந்தார்.
தினமும் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
-விதுசன்-