வவுனியா பன்றிக்கெய்தகுளம் இராணுவ விஷேட அதிரடிப்படையினர் முகாமை அண்டிய பகுதியில் இன்று (14.05.2016) அதிகாலை 4 மணியளவில் மருத்துப் பொருட்களை ஏற்றிச் சென்ற குளிரூட்டி வாகனத்துடன் பேரூந்து மோதுண்டதில் பேரூந்தில் பயணித்தவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்..
வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று அதிகாலை தென்பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து வவுனியாவிலிருந்து மருந்துப் பொருட்களை விநியோகம் செய்யும் குளிரூட்டி வாகனம் பாதை ஓரத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த போது சுற்றுலா சென்ற பேரூந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பயணிகள், குளிரூட்டி வாகனத்தில் சென்றவர்கள் உட்பட12 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியா புளியங்குளத்தில் கோர விபத்து!!(படங்கள்)


























