சர்வதேச சொற்பொழிவுக்கலை போட்டியில் தகுதி பெற்றுள்ள இலங்கை மாணவி!!

578

Student

இங்கிலாந்து லண்டன் தலைநகரில் இடம்பெறும் சர்வதேச ‘பொது விரிவுரை’ சொற்பொழிவுக்கலை போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாணவியொருவர் அரை இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கொழும்பு மியூசியஸ் வித்தியாலயத்தின் தேவினி நெத்மா வணிகஆராச்சி என்ற மாணவியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் 09ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை இடம்பெற்ற இப் போட்டிக்கு 56 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை ஆங்கிலம் பேசுபவர்கள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய ‘பொதுமக்கள் விரிவுரை’ சொற்பொழிவுக்கலையின் வெற்றியாளரான தேவினி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.