கல்கமுவ, சியம்பலேவ பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விகாரையின் விருந்துபசாரசாலையில் தேரர் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
52 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






