மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலி!!

1080

Electric shok

எம்பிலிப்பிட்டிய- காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைத் தோட்டத்தின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை தொட முனைந்த போதே மின்சார தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் பலியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

17 மற்றும் 25 வயதான இளைஞர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.