மரம் முறிந்து விழுந்ததில் கணவர் பலி : மனைவி படுகாயம்!!

1003

Maram

மாதம்பே – ஏகொடவத்தை வீதிக்கருகில் உள்ள வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதான வர்ணகுலசூரிய ரக்சான் பிரணாந்து என்ற நபரே பலியாகியுள்ளதாகவும், இவரது மனைவியான 36 வயதையுடைய தம்மிக பியசீலி காயமடைந்நு மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.