வவுனியா பத்தினியார் மகிழங்குளம் குளத்தில் உடைப்பு : பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது!!

1020

 
இன்று(19.05) காலை வவுனியா பத்தினியார் மகிழங்குளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், பொது மக்களின் ஒத்துழைப்புடன் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளத்தை அண்மிய பகுதியிலிருக்கும் பத்தினியார்மகிழங்குளம் குளக்கட்டில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட வவுனியா கமநலத் திணைக்கள சிரேஷ்ட பொறியியலாளர் இக்குளம் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததுடன் இன்று இப்பணிகளை மேற்கொள்ள இருந்தபோதே இக்குளம் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பகுதிக்கு விரைந்த கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் குளம் உடைப்பு ஏற்பட்டதை பார்வையிட்டதுடன் மேலதிக பணிப்புரைகளை வழங்கி, அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் மண்மூட்டைகள் அணைக்கப்பட்டு நிகழவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

குளத்தில் எட்டு அடி தண்ணீர் உள்ளதாகவும் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார் தெரிவித்தார்.

DSC03686 DSC03691 DSC03701 DSC03704 DSC03707